பல வருட காலங்களாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படும் திருகோணாமலை நகரின் மத்தியில் அமைந்துள்ள மக்ஹேசர் விளையாட்டரங்கை இன்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பார்வையிட்டார்.
இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட சுவட்டு மெய்வல்லுனர் விளையாட்டுகளுக்கான குறித்த மைதானத்தின் புனரமைப்பு பணிகளின் போது மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடந்த 2014ம் ஆண்டு முதல் இன்று வரை எந்த விதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இதன் காரணமாக பல இளைஞர்கள் வேறு திசைகளுக்கு திருப்பப்படும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே இதனை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு வெகுவிரைவில் முன்னெடுக்க வேண்டும் என செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கேட்டுக் கொண்டார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை